ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டுவிழா

கோவை, துடியலூர் வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் 27வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு கோவை, கருமத்தம்பட்டியில் இயங்கும் இசட்.எப் காற்றாலை நிறுவனத்தின் பிளான்ட் ஹெட் தீபக் போகேகர் மற்றும் பொதுமேலாளர் ஸ்ரீதர் சூரியநாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரியின் சிறந்த மாணவருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு துறையிலும் சிறந்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி சி.வி.ராம்குமாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் உமா, கல்லூரி துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் இசட்.எப் காற்றாலை நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.