கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு

இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வானதி சீனிவாசன்

கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை மக்கள் சேவை மையம் & ட்ரீம் சோன் நிறுவனம் சார்பில் தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் வகையில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு விழா நடைபெற்றது.

கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கைத்தறி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்கள் மத்தியில் கைத்தறி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை கல்லூரிகளில் ‘ஃபேஷன் ஷோ’ ஒருங்கிணைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஒருங்கிணைத்தார். இன்றைய இளைய தலைமுறையினரிடம் கைத்தறி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கல்லூரியிலும் நடக்கும் இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாணவிகள் முற்றிலும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கைத்தறியிலான தாவணி, சேலை போன்ற ஆடைகளை அணிந்து வந்தனர்.

அணிவகுப்புக்குப் பின்னர் கைத்தறி குறித்த பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டது. இவற்றில் வெற்றிப் பெறுபவர்களில் ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் இரண்டு மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக கோவை மாவட்டத்தின் கல்லூரிகளிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இறுதிப் போட்டி நடத்தப்பட்டது.

கைத்தறி ஆடைகள், நெசவாளர்கள் குறித்த விழிப்புணர்வை இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்வதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.