கட்டடப் துறையோடு பிற துறைகளும் பணியாற்றலாம்!

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டட பொறியியல் துறை சார்பில் ‘இண்டஸ்ட்ரி கான்கிளேவ் 2024’ என்ற பெயரில் தொழில் வல்லுநர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட யு.ஆர்.சி. கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கபிலன் தேவராஜன், கட்டடப் பொறியியல் துறை என்றும் செழிப்பாகவும், பிற துறைகளில் கட்டடப் பொறியியல் துறையோடு இணைந்து பணியாற்றலாம் என்று பேசியதோடு, மேலும் தமிழ்நாட்டில் நடப்பில் உள்ள மிகப்பெரிய அளவிலான கட்டுமானங்கள் பற்றி பேசினார்.

முன்னதாக, பேசிய கல்லூரி முதல்வர் சரவணன் சுற்றுச்சூழலுக்கு ஏற்றக் கட்டிடப் பொறியியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாநாட்டில் பல நிறுவனங்களை சார்ந்த 34 வல்லுநர்கள் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சமீபத்திய போக்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி கூறினர்.

குறிப்பிடத்தக்க வகையில் அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸின் தலைவர் சுதாகர், கோயம்புத்தூர் பில்டர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் சகாயராஜ், கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷனின் ராமகிருஷ்ணன், செயலாளர் சேகர், ஈரோடு மாவட்ட சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தின் தலைவர் குப்புசாமி, மற்றும் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் லக்ஷ்மணன் ஆகியோர் பங்கேற்றனர்.