ராயல் கேர் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்!

அன்னூர் பகுதியை 52 வயது மிக்க வயோதிகர் , மார்ச் 29 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது கார் மோதி விபத்தில் படுகாயம் அடைந்தார்.

கோவை ராயல் கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் மூளை சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்யப்பட்டுது. பின்னர், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி இருதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக அளித்தனர். இரு சிறுநீரகங்களில், ஒன்று ராயல் கேர் மருத்துவமனைக்கும், மற்றொன்று கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும், கல்லீரல் சேலம் மணிப்பால் மருத்துவமனைக்கும் , இருதயம் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கும், கண்கள் கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல்கள் கோவை கங்கா மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப் பட்டது. இதனையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.