ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் 22 –வது கல்லூரி ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை தாங்கினார். இவ்விழாவில் ஃப்ளோலிங்க் சிஸ்டம்ஸ் லிமிடெட் முன்னாள் நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராகவும், அண்ணாமலை கேபிடல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அண்ணாமலை கெளரவ விருந்தினராகவும் கலந்துகொண்டார்கள்.

மேலும், இருவரும் மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டியதுடன், கல்வியில் சிறந்து விளங்கும் இந்நிறுவனம் வெற்றியடைய வாழ்த்தினார்கள்.நிகழ்ச்சியில், 2023-2024 ஆண்டிற்கான பொதுப்பிரிவில் ‘சிறந்த மாணவர் விருது’ இறுதியாண்டு இயந்திர பொறியியல் துறை மாணவர் தனுஷ் பிரபாகரன், மாணவியர் பிரிவில் இறுதியாண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவி ஹேமா வர்ஷினிக்கும் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் பால்ராஜ், 2023-2024க்கான ஆண்டு அறிக்கையை வழங்கினார்.