ராம்ராஜ் காட்டன் வேட்டி வாரம்! ரூ.500க்கு 3 வேட்டிகள் கொண்ட கோம்போ பேக் அறிமுகம்

ராம்ராஜ் காட்டனின் வேட்டி வாரம் ஜனவரி 1 முதல் 7 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. 3 வேட்டிகள் கொண்ட கோம்போ பேக் ரூ.500க்கு விற்பனைக்கு வருகிறது.

இன்றைய இளைய தலைமுறையினருக்கும் பாரம்பரியத்தில் ஆர்வம் ஏற்படுத்தி அவர்களது மனதில் ஆழ்ப்பதிந்து, தொடர்ந்து அவர்கள் ஈடுபாட்டுடன் வேட்டி என்ற இந்தியக் கலாச்சார உடையின் மகத்துவம் அவர்கள் வாழ்வில் ஒரு பகுதியாக மாற ராம்ராஜ் தன் முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக அரசால் கடந்த 2015 ஆம் ஆண்டு, ஜனவரி 6ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட வேட்டி தினத்தை ராம்ராஜ் வேட்டி வாரமாகக் கொண்டாடி வருகிறது. வேட்டிக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்து ராம்ராஜ் காட்டன், ஜனவரி 1 முதல் 7 ஆம் தேதி வரை வேட்டி வாரம் கொண்டாடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தி, இந்தியக் கலாச்சார உடையான வேட்டியின் உபயோகம் பெருமளவில் உயர ராம்ராஜ் எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்து வெற்றி பெற்று வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு 3 வேட்டிகள் கொண்ட கோம்போ பேக் ரூபாய் 500க்கு விற்பனைக்கு வருகிறது. மேலும் இவ்வருடம் கூடுதல் சலுகையாக 3 சிங்கிள் பேன்சி பார்டர் வேட்டிகள்-ரூ.5௦௦, 3 சிங்கிள் பெரிய பார்டர் வேட்டிகள்-ரூ.5௦௦, 2 சிங்கிள் பேன்சி பார்டர் வேட்டிகள்-ரூ. 5௦௦, 2 டபுள் பேன்சி பார்டர் வேட்டிகள்-ரூ.6௦௦ மற்றும் 2 பஞ்சகச்சம் ரூ-990 ஆகியவையும் விற்பனைக்கு வருகின்றன.
ராம்ராஜ் விவசாய கிராமப்புற நெசவாளர் நலன் கருதி பெருமளவில் வாடிக்கையாளரைச் சென்றடைய வாங்கும் விலையில் இந்த ஆண்டு வேட்டி வாரக் கொண்டாட்டத்திற்கு 3 வேட்டிகளின் கோம்போ பேக்கை விற்பனைக்கு விடுக்கிறது.

லிட்டில் ஸ்டார் குழந்தைகள் வேட்டிகள் முதல் ஜெனெக்ஸ்ட் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிகள் வரை இன்று மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இளைஞர்கள் அனைவரையும் வேட்டி கட்ட வைத்த ராம்ராஜ்.இந்த ஆண்டு வேட்டி வார விற்பனைக்குச் சலுகை விலையில் அறிமுகப்படுத்தியுள்ள மேற்கூறிய வேட்டி ரகங்களை வாடிக்கையாளர்கள் பெற்று 2024 புத்தாண்டில் பாரம்பரிய கலாச்சாரம் இன்றும் வளர்ந்துயர தன்முன் முயற்சிகளை முன்னெடுத்து வைத்துள்ளது. தமிழர் பாரம்பரிய பண்டிகை பொங்கல் 2024க்கான முதல் பரிசாக வேட்டி வாரங்கள் பயனளிப்பதாக இருக்கும்.

வேட்டி கட்டியவர்களே மதிப்பு மிக்கவர்கள் என சல்யூட் அடிக்க வைத்த சாதனையாளர் ராம்ராஜ் நிறுவனர் நாகராஜன், கிராமப்புற நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படச் செய்து காந்தி கண்ட கனவினை நனவாக்கிட அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் வண்ணம் ஆராய்ச்சிகள் பல செய்து 41 ஆண்டுகளாகத் தனித்துவம் மிக்க உடையாக வேட்டியை அதன் விற்பனையை மேம்படுத்தி வருகிறார்.