வி.எல்.பி கல்லூரியில் ‘கேக் வாக்-23’

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கேக் வாக்-23” என்ற பாரம்பரிய பழக்கலவை நிகழச்சி நடந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை சார்பாக இந்நிகழச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இதில், உலர்ந்த பழங்கள், மசாலாப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் ஆகியவை கலந்த இக்கலவையோடு, திராட்சை, அத்தி, செர்ரி, பப்பாளி உள்ளிட்ட பழங்கள், முந்திரி போன்றவை, பிஸ்தா, பாதம், உலர்ந்த இஞ்சி, ஜாதிக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, போன்ற மசாலாப் பொருட்களும் பழ வகைகளும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டு மது அல்லாத ஒயின் மற்றும் பழங்களில் ஊற வைக்கப்பட்ட சாறுகள், ஆகியன பயன்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் நிர்மலா மாதா கான்வென்ட் பள்ளி முதல்வர் ஜெயா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும், கல்லூரி முதல்வர் சதீஷ்குமார், துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.