குடும்பத்தின் வறுமையை விரட்ட களமிறங்கியவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ

1985 – ல் போர்ச்சுக்கலின் ஒரு சிறு தீவில் ஒரு குழந்தை பிறந்தது. வறுமையின் கோரப்பிடியினால் கருவிலேயே கலை படவேண்டிய அக்குழந்தையை தாயின் பிடியினால் இப்பூமியை வந்தடைந்தது. அக்குழந்தைக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று பெயர் சூட்டினார்கள்.

ரொனால்டோவின் தந்தை தோட்ட வேலைகள் செய்பவர். தாய் வீடு வீடாக சமையல் வேலைகள் துப்பரவு வேலைகள் செய்பவர். இவ்வேளைகளில் அவர்கள் சம்பாதிக்கும் பணம் நிச்சயம் நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை பராமரிக்க போதவில்லை. தினசரி மூன்று வேளை உண்பதே அவர்களுக்கு பெரும் சவாலாக மாறியது.

ஒருநாள் ரொனால்டோவின் தந்தைக்கு ஒரு கால்பந்தாட்ட கிளப்பில் வேலை கிடைத்தது. மைதானத்தின் பராமரிப்புகள், விளையாட்டு வீரர்கள் தங்கும் இடங்களை சுத்தம் செய்வது என அங்கிருந்த அனைத்து எடுபிடி வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

தினமும் தந்தையுடன் மைதானம் செல்லும் ரொனால்டோ அங்கு வீரர்கள் விளையாடும் விளையாட்டை இமை கொட்டாமல் பார்த்த படியே நிற்பான்..வீடு திரும்பியதும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டே தன்னந்தனியே உதைபந்தாட்டம் விளையாடுவார் ஆர்வத்தைக் கண்ட அவனது தந்தை வீட்டில் இருந்த பழைய துணிகளைக் கொண்டு ஒரு பந்தை உருவாக்கி அதை ரொனால்டோவுக்கு பரிசளித்தார். ஏனெனில் ஒரு கால்பந்து வாங்குவதற்குக் கூட அவர்களிடம் பணம் இருக்கவில்லை இப்படியே தினமும் மைதானத்தை பார்த்தபடி நின்றிருந்த ரொனால்டோவிற்கு ஒருநாள் மைதானத்தில் விளையாடும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ரொனால்டோவின் தந்தை அந்த கிளப் நிர்வாகத்திடம் கெஞ்சி தினமும் அங்கு விளையாட வரும் மாணவர்களுடன் விளையாட வைத்தார்.

ஆனால் பணம் படைத்த குடும்பங்களில் இருந்து வருபவர்கள் ரொனால்டோவின் தந்தையோ மைதானத்தை சுத்தம் செய்பவர்.  கால்பந்து விளையாட ஒரு காலணி கூட ரொனால்டோவிடம் இருக்கவில்லை. தனது சகோதரனின் கிழிந்த காலணிகளை அணிந்து கொண்டு விளையாட செல்வார். இதனால் சக மாணவர்களால் மிக மோசமான முறையில் கேவலப்படுத்தபட்டார் .ஒரு காலணி இல்லாத உனக்கு கால் பந்தாட்டம் கேட்குதா எனக்கூறி அவமானப்படுத்தப்படுவார் .

ரொனால்டோ வகுப்பறையில் மந்தமான மாணவன் , எப்போதும் கடைசி இடமே இதனை காரணம் காட்டி தினமும் சக மாணவர்களும் ஆசிரியர்களும் அவனை மட்டம் தட்டிக் கொண்டே இருந்தார்கள்.

இத்தகவல் அறிந்த ரொனால்டோவின் தாய்  காதுகளுக்கு எட்ட;  கல்வியை தூக்கி ஒரு மூலையில் போட்டுவிட்டு முழு நேரமாக உதைபந்தாட்டத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கினார்..

தாயின் ஆதரவு ரொனால்டோவுக்கு மிகப் பெரும் சக்தியை கொடுத்தது. அச்சத்தின் வெளிப்பாடு கால்பந்தாட்ட மைதானத்தில் தெரிந்தது. அங்கு ரொனால்டோவின் திறமைகளை கண்டு வாயடைத்து போன போர்ச்சுக்கல் ஸ்போர்ட்டிங் கிளப் ரொனால்டோவை போர்ச்சுக்கல் தலை நகருக்கு அழைத்துச் சென்று பயிற்சி வழங்க ஆரம்பித்தது.

அப்போது அவனுக்கு வயது வரும் 11 மட்டுமே ஆனால் தனது குடும்பத்தை பிரிந்து அவனால் அங்கு இருக்க முடியவில்லை.  தினமும் ஒரு மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்து விடுவான்.

இந்நிலையைக் கண்டு நிர்வாகம் மீண்டும் அவனை அவனது கிராமத்திற்கு அனுப்பி வைத்தது. ஆனால் வீடு திரும்பிய ரொனால்டோ பின் கண்களில் பட்டது . அவனது குடும்பத்தின் வறுமை வறுமையை விரட்ட விரும்பினால் அதற்கு கால்பந்தாட்டமே ஒரே வழி என அவன் உறவினர் ஒருவர் அறிவுரை வழங்கி அது ஆழமாக அவனது மனதில் பதிந்தது.

அடுத்த நாளே மீண்டும் ஸ்போர்ட்டின் கிளப் திரும்பினான் . அவன் மனதில் சோகம் இருக்கவில்லை தனது குடும்பத்தின் வறுமையை விரட்ட வேண்டும் என்று நினைத்தான் .

ரொனால்டோவின் ஆட்டம் மைதானத்தில் அனல் பறந்தது. அங்கிருந்த அனைத்து கிளை நிர்வாகிகளின் கவனமும் ஒரு பக்கம் திரும்பியது இப்படியே வருடங்கள் கடந்த பின்பு கருத்துக்களையும் தாண்டி ரொனால்டோவ்வின் புகழ் பரவ ஆரம்பித்தது .

இங்கிலாந்தின் மான்செஸ்டர் அணி 100 கோடிகளுக்கு மான பணம் கொடுத்து 2003 இல் அவரைத் தங்களது அணிக்கு வாங்கிக்கொண்டது அங்கு ரொனால்டோவிற்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன . முதல்முறையாக மான்செஸ்டர் அணிக்காக ரொனால்டோ களமிறங்கினர். வீரர்கள் மத்தியில் வாய் பிளக்க வைத்தது. விளையாட்டை முடித்துக் கொண்டு வரும்போது அங்கிருந்த அனைவரும் அவர்களை எழுந்து நின்று கைதட்ட வைத்தது .

அந்த நொடியிலிருந்து அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறியது அவர் தொட்ட இடம் துலங்க ஆரம்பித்தது மைதானத்தில் ரொனால்டோவின் வேகமும் ஆக்ரோஷமும் உலகெங்கும் இவருக்கு ஒரு மிகப் பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது.

மிக விரைவிலேயே உலகின் டாப் கால் பந்தாட்ட பட்டியலில் உயர்ந்து நின்றார் ரொனால்டோ .
கால்பந்தாட்டத்தின் அனைத்து உயரிய விருதுகளையும் பெற்றார் பல கின்னஸ் சாதனைகளை படைத்தார். ரொனால்டோவின் சொத்து மதிப்பு சுமார் 35,000 கோடிகளையும் கடந்துவிட்டது.

என்னதான் தன்னிடம் பணம் புகழ் என அனைத்தும் சேர்ந்தாலும் இவர் இருண்ட காலத்தை மறந்து விடவில்லை. உலகெங்கும் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றார். இன்றுவரை தனக்கு கிடைத்த பல உயரிய விருதுகள் மற்றும் தங்க காலணி ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு உலகெங்கும் கொடிய நோய்களினாலும் வறுமையினாலும் பிடிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல உதவிகளை வழங்குகிறார் .

ஒருநாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது மகனை குணப்படுத்த பணம் இல்லாத ஒரு தாய் உங்களின் கையொப்பமிட்ட ஜெர்சியை எனக்கு அனுப்பி வைத்தால் அதை ஏலம் விட்டு கிடைக்கும் பணத்தைக் கொண்டு என் மகனை குணமாக்குவேன் என ரொனால்டோவிற்கு கடிதம் எழுதினார்.

சில நாட்களின் பின்னர் அவரிடமிருந்து பதில் வந்தது அதில் ரொனால்டோவின் கையொப்பமிட்ட ஜெர்ஸியுடன் ஒரு லட்சம் டாலருக்கான காசோலையும் இருந்தது. அந்த அளவிற்கு சக மனிதர்களின் வாழ்வில் அக்கறை கொண்டவராக இருக்கின்றார் அவர் .

ஒரு நேர்காணலில் யாரும் அறியாத ஒரு குக்கிராமத்தில் மிக ஏழ்மையில் பிறந்த உங்களால் எவ்வாறு இத்தனை பெரிய உயரத்தை அடைய முடிந்தது என ரொனால்டோவிடம் கேட்டாக போது அவர் நான் வெற்றி பெறுவேன் என்பதை எவரும் நம்பவில்லை. என்னையும் எனது தாயையும் தவிர உங்களால் வெற்றி அடைய முடியும் என நீங்கள் முழுமையாக நம்பினால் அக்கனமே பாதி வெற்றியை நீங்கள் அடைந்து விட்டீர்கள் மிக விரைவிலேயே மிகுதியையும் அறிந்துகொள்வீர்கள்.

எனவே என் நிலையிலும் நம்பிக்கை இழக்காதீர்கள் என கூறி முடித்தார் ரொனால்டோ……