Final-ல் தோனி, தீபக் சஹார் விளையாடுவதில் சிக்கல்

3 முறை ஓவர் ரேட் வார்னிங் … கலக்கத்தில் CSK

ஐபிஎல் 16வது சீசனில் தொடர்ந்து அதிரடியாக ஆடி வரும் CSK, லீக் சுற்றில் 14 போட்டிகளில் 17 புள்ளிகளை பெற்று அடுத்து qualifier சுற்றில் அபாரமாக செயல்பட்டு குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஃபைனலில் மகேந்திர சிங் தோனி, தீபக் சாஹர் ஆகியோர் விளையாட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்துக்கு எதிராக qualifier 1 ஆட்டத்தில் 15வது ஓவர் முடிந்த பிறகு அடுத்த ஓவரை வீச தயாரான மதீஷ பத்திரனவை நடுவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். காரணம் 15வது ஓவரின் போது பத்திரன பீல்டிங் செய்யவில்லை. 8 நிமிடங்கள் வரை களத்திற்கு வெளியே இருந்துள்ளார். இதனால் அடுத்த 8 நிமிடங்கள் வரை பத்திரனவால் விதிமுறை காரணமாக பந்து வீச முடியாது என்பதால் வேறு பௌலர் பந்து வீச வேண்டும் என நடுவர்கள் கூறினார்கள்.

அப்போது பத்திரன களத்திற்குள் வந்து 4 நிமிடங்கள் ஆகியிருந்தது.மீதி 4 நிமிடங்களை ஈடு செய்ய நடுவர்களிடம் தோனி பேச்சு கொடுத்து விதிமுறை குறித்து கேட்டறிந்தார். நேரம் சரியானதால் அதன் பிறகு பத்திரன பந்து வீச சென்றார்.

தோனி இப்படி செய்தது CSK அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளது. ஆம் CSK ஏற்கெனவே இரண்டு முறை பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டு, இரண்டு முறையும் ஓவர் ரேட்டிற்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது குஜராத் அணிக்கு எதிராக பத்திரனவால் CSK விற்கு ஓவர் ரேட் அபராதம் விதிக்கப்படும் சூழல் இருக்கிறது. மேலும் பத்திரன விஷயத்தில் போட்டியை தாமதப்படுத்தியது தவறு என்பதால் நிச்சயம் ஓவர் ரேட் அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது. அப்படி விதிக்கப்பட்டால் தோனியால் ஃபைனலில் விளையாட முடியாது. ஆம் ஒரு சீசனில் மூன்று முறை ஓவர் ரேட் வார்னிங் விடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

ஆகையால் தோனி கடைசி போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் குஜராத்துக்கு எதிரான கடைசி பந்தில் தீபக் சாஹர் கேட்ச் பிடித்த போது காலில் லேசான காயம் ஏற்பட்டது. அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டு இருப்பதால் கடைசி போட்டியில் விளையாடுவாரா என்பதை மருத்துவர்கள் உறுதி செய்து நாளைக்குள் அறிவிப்பார்கள்.

இப்படி இந்த இரண்டு விவகாரமும் CSK ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Article by : இ. ரா. சரவணா