வாகனப் பேரணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கிய நா.கார்த்திக்

மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை, தமிழ்நாடு முழுவதும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட DMK Riders – ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அருகில், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த இருசக்கர வாகனப் பேரணி வீரர்கள் வெள்ளிக்கிழமை சவுரிபாளையம் தேர்வீதி திடல் பகுதிக்கு வருகை தந்தனர். அவர்களை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் உற்சாகமாக வரவேற்று பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

இந்நிகழ்வில் அனைத்து கழக நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து கழக செயல்வீரர்கள் கலந்துகொண்டனர்.