ஜே.கே.பி. மருத்துவ மையத்தில் முப்பெரும் விழா

டாக்டர் ஜே.கே.பி மருத்துவ மையத்தின் 18ஆம் ஆண்டு விழா, புத்தக வெளியீட்டு விழா, இதய கோவில் திறப்பு விழா போன்ற முப்பெரும் நிகழ்வுகள் ஞாற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியான புத்தக வெளியீட்டு விழாவில் ‘துடிக்கின்ற நெஞ்சென்று ஒன்று’ எனும் தலைப்பில் புத்தகத்தை இந்திய காற்றாலை சக்தி சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்காயன் வெளியிட வேதநாயகம் மருத்துவமனையின் தலைவர் கந்தசாமி பெற்றுக்கொண்டார்.

இதில் டாக்டர் ஜே.கே.பி மருத்துவ மையத்தின் தலைவர் பெரியசாமி, தொழிலதிபர் இயகோகா சுப்ரமணியம், விவசாய கல்லூரியின் முன்னாள் டீன் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.