ஜி.கே.என்.எம் சார்பில் பக்கவாத நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரி சார்பில் பக்கவாத தினத்தை முன்னிட்டு கோவை, ரேஸ் கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஜி.கே.என்.எம். செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் நாடக வடிவிலும், நோய் குறித்த தகவல்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடியும்  பொதுமக்களிடையே பக்கவாதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அதுமட்டுமின்றி, பக்கவாத நோயினை முன்கூட்டியே எவ்வாறு கண்டறிவது, நோய்க்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகள், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுதல், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினை கடைபிடித்தல் உள்ளிட்டவை குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் வாயிலாக ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.