மகளிர் உரிமைத் தொகை திட்டம் : புதிதாக 11 லட்சம் பேர் மேல்முறையீடு!

தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு  11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் மேல்முறையீடு செய்து வந்தனர். இதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் முடிவடைந்த  நிலையில் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு முழுவதும் 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் , துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆகியோர் பரிசீலித்து வருகின்றனர். அடுத்த 30 நாள்கள் இது தொடர்பான பரீசீலனை நடைபெறும் என்றும் பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு வரும் நவ.15 ஆம் தேதி முதல் தொகை வரவு வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.