கலைத்திறன் போட்டிகளில் அசத்திய மாணவர்கள்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான அரியாசனம் 2024 நிகழ்வு நடைபெற்றது.

தொடக்க விழா நிகழ்வைத் தொடர்ந்து மாணவர்களுக்கான குழு நடனம், தனிநடனம், திறனறிதல், தனிப்பாடல், மெகந்தி, நிழற்படக் காட்சிப்படுத்தல், முக அலங்காரம், ரீல்ஸ் எனப்படும் வேடிக்கைக் காணொளி, உள்ளிட்ட பல கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் மாணவர்களின் சார்பாக பல்துறை அங்காடிகள் வைக்கப்பட்டன.கலைத்திறன் போட்டிகளில் சிறப்பானப் பங்கேற்பை வழங்கியத் துறையாக வணிகவியல் துறைத் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஷாம் விசால் மற்றும் அனு ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் இனிய குரலில் பாடல்களைப் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். நிகழ்வின் நிறைவாகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்லூரியின் நிர்வாக இயக்குநர் அனந்த கிருஷ்ணன், கல்லூரிச் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் பரிசுகளை வழங்கியதோடு, மாணவர் குழு உறுப்பினர்களுக்கும், மாணவர்குழு ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.