விமர்சையாக கொண்டாடப்பட்ட கத்தி போடும் திருவிழா

கோவை டவுன்ஹால் அருகே உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் ஊர்வலமானது  பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் துவங்கி சவுடேஸ்வரி கோவிலை வந்தடைந்தது.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக்கொண்டு கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். உடலில் ரத்தம் வழிந்து ஓடியபடியே பக்தர்கள் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு ஆடி சென்றனர். திருமஞ்சனப் பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஊர்வலத்தை தொடர்ந்து  அம்மனுக்கு விசேஷ பூஜை நடத்தப்பட்டு திருக்கல்யாணமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.