லியோ ரிலீஸ்; கோவை விஜய் ரசிகர்களுக்கு அதீத கட்டுப்பாடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகி ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகியது போல் அடுத்தடுத்த சர்ச்சைகளிலும் சிக்கிய லியோ, திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைவரிடத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிகாலை 4 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் காலை 9 மணிக்கு திரைப்படம் வெளியாகியது. தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் திரண்டு படத்தை உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.

இதனிடையில், கோவை மாநகரில் அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களுக்குக் கொண்டாட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.  வழக்கமாகக் கோவையில் உள்ள சாந்தி திரையரங்கில் மேள தாளம் முழங்க விஜய் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும், பட்டாசுகள்  வெடித்தும் கொண்டாட்டங்கள் நடக்கும் நிலையில் இந்த முறை எந்த வித கொண்டாட்டங்களும் இன்றி ரசிகர்கள் படம் பார்த்துள்ளனர்.