பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு!

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்‌ தொகை வழங்கிட முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிக்கை

தமிழகத்திற்கு, காவேரியிலுருந்து கர்நாடக மாநிலம் போதிய அளவு தண்ணீர்‌ திறந்துவிடாததால், மேட்டூர் அணைக்கான நீர் வரத்து குறைந்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில்‌ குறுவை பயிர்‌ சாகுபடி பாதிப்படைந்துள்ள நிலையில் தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாததால் தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில்‌ சேதமடைந்துள்ளன.

இதையடுத்து,பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 13.500 இழப்பீட்டுத்‌ தொகை வழங்கிட முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்.