இந்துஸ்தான் செவிலியர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ் பிரபு ஆகியோர் தலைமை வகித்து சிறப்புரை வழங்கினர்.
மேலும், கல்லூரியின் துணை முதல்வர் ஆண்ட்ரியா, மருத்துவர் பாலகுமார், சுகாதார அறிவியல் பட்டப்படிப்புகளின் ஒருங்கிணைப்பாளர் பாப்பாத்தி, செவிலியர் கல்லூரி முதல்வர் மணிமொழி, பேராசிரியர் கிரேஸ் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
இதில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.