பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்!

பகுதிநேர சிறப்பாசிரியர்கள், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகப் போராட்டம் நடத்தி வந்துள்ள நிலையில் தற்போது தற்காலிகமா போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

சம வேலைக்குச் சம ஊதியம், பணி நிரந்திரம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் கல்வி வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆகிய மூன்று சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.