எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லூரி வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மண்டல அளவிலான போட்டிகள் சமீபத்தில் நடந்தது.
10 அணிகள் கலந்துகொண்ட 11-வது மண்டல போட்டியில், டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன.
டென்னிஸ் இறுதி போட்டியில் குமரகுரு அணி 2-0 என்ற கணக்கில் எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லூரியை வீழ்த்தி முதல் இடம் பிடித்தது. இரண்டாம் இடத்தை எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லூரியும், மூன்றாம் இடத்தை எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லூரியும் பிடித்தன.
மேலும், டேப்பில் டென்னிஸ் இறுதி போட்டியில் குமரகுரு அணி 3-0 என்ற கணக்கில் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லூரியை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தது. இரண்டாம் இடத்தை எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லூரியும், மூன்றாம் இடத்தை அரசு தொழில்நுட்ப கல்லூரியும் பிடித்தன.
இதில், சிறப்பு விருந்தினராக கல்லூரி இயக்குநர் அருணாச்சலம், முதல்வர் சார்லஸ், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும், விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் உடற் கல்வி இயக்குநர் வெள்ளிமலை உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.