மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் தொடக்கப்பள்ளி கட்டடம் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மருதாபுரம் சாலை, நவாவூர் பிரிவு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பொதுநிதியிலிருந்து, ரூ.22.5 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த கட்டடங்களை அகற்றி புதிதாக உணவுக்கூடம் மற்றும் 2 வகுப்பறைகள் கட்டும் இடத்தை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானைதமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் குமுதம் குப்புசாமி, உதவி ஆணையர் சரவணன், செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர்ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.