கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா

இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தின விழா கோவை பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, மேயர் கல்பனாஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மேலும், துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவகுமார், மாநகரப் பொறியாளர் சுகந்தி, மண்டலத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு), தெய்வயானை தமிழ்மறை(மேற்கு), கதிர்வேல் (வடக்கு), நகரமைப்பு குழுத்தலைவர் திரு.சோமு (எ) சந்தோஷ், பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்ஆகியோர் கலந்துக் கொண்டனர்.