இரத்தினம் கல்லூரியில் சுதந்திர தின விழா

கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக  77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் இந்திய இராணுவ வீரர் லெப்டினன்ட் கர்னல் சின்ன சாமி ஜெயவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் மாணிக்கம், கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், ரோட்டரி கிளப் தலைவர் ராஜசேகரன், செயலாளர் பொன்ராஜ் மற்றும் பல ரோட்டரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவை தெற்கு ரோட்டரி கிளப் சார்பாக கடந்த கல்வி ஆண்டில் (2022-2023) சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வி சார் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருதுகளானது ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கட்டுரை, சிறந்த வழி காட்டி ஆசிரியர், சிறந்த சேவை பணிக்கான விருது, சிறந்த துறை தலைவருக்கான விருது என 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டது.