ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் சுதந்திர தின விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் சுதந்திர தின விழா செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி சுதாகரன் கலந்துகொண்டு, உலகில் உள்ள பிற நாடுகளைக் காட்டிலும் பெருமை மிக்கது நம் நாடு. இந்தியர்களாகிய நம்மை மனதால் தாழ்த்தும் எந்த எண்ணத்தையும் நாம் அனுமதிக்கக் கூடாது. காலனியச் சிந்தனைகளில் நம்மைத் தொலைத்து விடாமல், தலைசிறந்த நம் நாட்டின் சிறப்புகளை உணர்ந்து போற்ற வேண்டும் என்று உரையாற்றினார்.

இதில் கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை தாங்கி, சுதந்திரத்தின் பெருமையையும் மக்கள் நாட்டுக்காகச் செய்யவேண்டிய கடமைகளையும் பற்றி எடுத்துரைத்தார்.கல்லூரி மாணவிகளின் உரையோடு, இராணுவ வீரர் அபிநந்தன் வர்த்தமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் தேசிய மாணவர் படையின் மைம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.