கார்ட் பந்தயப் போட்டியில் 6 விருதுகளை பெற்ற என்.ஜி.பி மாணவர்கள்

ஆகஸ்ட் 7 முதல் 9 ஆம் தேதி வரை எய்ம்ஸ் கிளப், தேசிய அளவிலான கார்ட் பந்தயப் போட்டி நடத்தியது. இதில் டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் இயந்திரவியல் துறை மாணவர்கள் “டீம் டிசெப்டிகான்ஸ்” 6 விருதுகளும், 14000 ரூபாய் பரிசு தொகையும் பெற்றனர்.

150cc பிரிவுக்கான பசுமை வாகன விருது, சிறந்த புதுமை தொழில்நுட்ப விருது, சிறந்த சமூக ஊடக கார்ட் அணி விருது, பெண் போட்டியாளர்களுக்கான கல்பனா சாவ்லா விருது, குறைந்த விலை கார்ட் விருது, ஆட்டோகிராஸ் போட்டியின் சிறந்த அணி விருது என ஆறு விருதுகளை பெற்றனர்.

இம்மாணவர்களை கல்லூரி முதல்வர் பிரபா, செயலாளர் தவமணி பழனிசாமி மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் ஸ்ரீபாலாஜி ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.