3 பவுன் தங்கச் சங்கிலியை ஒப்படைத்ததற்கு போலீசார் பாராட்டு

பெரியநாயக்கன்பாளையம் பகுதி சாமி செட்டிபாளையத்தை சார்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் பெயிண்டர் வடிவேல் சனிக்கிழமை காலை 9 மணிக்கு, தேவி டெய்லர் கடை அருகில் வேலைக்காக நின்று கொண்டு இருக்கும் பொழுது 3 பவுன் தங்கச் சங்கிலி வழியில் கிடைத்தது அவர் உடனடியாக பாரதிய ஜனதா கட்சியின் பெரிய நாயக்கன்பாளையம் பஞ்சாயத்து பொறுப்பாளர் வீரசாமியிடம் கூறினார்.

பின்னர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் தாமோதரனிடம் தங்கச் சங்கலியை கொடுக்கப்பட்டது.

மறுநாள் தங்கச் சங்கிலியின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. கீழே கிடந்த தங்கச் சங்கிலியை முறையாக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதற்கு காவல் ஆய்வாளர் வடிவேல் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் நகர் மண்டல் தலைவர் மகேந்திர ராஜ் கட்சி நிர்வாகிகளும்  இருந்தனர்.