ரத்தினம் கல்லூரியில் தொழில் முனைவோர் நிகழ்ச்சி

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் மற்றும் ஐஐசி இணைந்து  நடத்திய தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதில் ரத்தினம் கல்லூரியின் தலைவர் மதன் செந்தில் தலைமை தாங்கினார். ரத்தினம் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி  மாணிக்கம், கல்லூரி முதல்வர்  பாலசுப்பிரமணியம், டீன்கள் சுரேஷ், சபரீஷ், மகேஷ் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் காமாட்சி முத்துலட்சுமி ஆகியோர் இணைந்து  இவ்விழாவை சிறப்பித்தினர்.

இதில் வழிகாட்டி மற்றும் பயிற்றுனரான சௌக்கத், இந்தியாவின் முதல் 10x மனநிலை வடிவமைப்பாளர் தீபக் ராஜ்குமார், தங்க பட்டறையின் முதல் தொழில் முனைவோர் மனோகர் மாசானம், ஐடியா குரு தீர்வுகள் நிறுவனர் சீனிவாசன், கோயம்புத்தூர் மற்றும்  டோட்டல் தீர்வுகள் நிறுவனர் செல்வகுமார் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி, கருத்துகளைப் பகிர்ந்தனர்.