கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பாக, வருகிற 27ஆம் தேதி மாலை 5.00 மணியளவில், பாலன் நகர் அருகில், மசக்காளிபாளையம் சாலையில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.  இந்நிகழ்விற்கு தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்துகொண்டு 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். என கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அறிவிப்பு.