அனைத்து  வசதிகளுடன் பேரூரடிகளார் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு நாளை திறப்பு 

பேரூர் ஆதீனம் சீர் வளர்ச்சி சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் சார்பில் பேரூர் சாந்தலிங்க அடிகளார் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (பேரூரடிகளார் மருத்துவமனை) வெளி நோயாளிகள் பிரிவு அண்மையில் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாளை (20.03.2024) முதல் உள் நோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து, மருத்துவமனை தலைமை செயல்பாட்டு அலுவலர் சுப்பிரமணியம்கூறுகையில், இம்மருத்துவமனை நான்கு தளங்களைக் கொண்ட 115 படுகைகளுடன் கூடிய மருத்துவமனையாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 50 படுக்கை வசதிகளோடு தரைதளமும், முதல் தளமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்து அறநிலைத்துறை உயர்மட்ட குழு உறுப்பினராகவுள்ள தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் இயங்கும் மருத்துவமனையில், தற்போது பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவம், தோல் நோய் மருத்துவம், முகச்சீரமைப்பு மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, குறைந்த கட்டணத்தில் ஆய்வுக்கூடம், 10% சலுகை கட்டணத்தில் மருந்தகம், பல்வேறு அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியன செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை சார்பில் மாதந்தோறும் ஒரு கிராமப் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெறும். குறைந்த செலவில் சிறந்த மருத்துவம்  இங்கு கிடைப்பது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, எக்கோ மற்றும் அனைத்து வசதிகளோடு மருத்துவமனைக்கென தனியாக ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புறநகர் பகுதியில் வாழும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும், என்றார்.