வி.எல்.பி. கல்லூரியில் ‘நுகர்வோர் உரிமைகள்’ விழிப்புணர்வு நிகழ்வு

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு வணிகவியல் துறை சார்பாக நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.

நிகழ்வில் கோவைப்புதூர், குனியமுத்தூர், குளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவ மாணவியர்கள் பொது மக்களிடையே துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். மாணவர்கள் பொது மக்களை அணுகி அவர்களின் உரிமைகள் குறித்தும் நீதித்துறை மன்றங்கள் குறித்தும் தெரிவித்தனர். ஏதேனும் குறைகள் இருந்தால், நுகர்வோர் உரிமை மற்றும் பாதுகாப்பு மன்றத்தில் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்கின்ற விழிப்புணர்வையும் வழங்கினர்.