இலகுவான மனம், ஆக்கமான சிந்தனையே வெற்றிக்கு அடிப்படை – ஆனந்தகிருஷ்ணன்

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் பன்னாட்டு மகளிர் தின விழா நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் கீதா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் நிர்வாக இயக்குநர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில் பேராசிரியர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள் கூறினார். மேலும், பேராசிரியர்கள் தன் உடல் நலம் மற்றும் மன நலம் பேணுதல் மிக அவசியம் என்பதை வலியுறுத்தினார். இலகுவான மனம், ஆக்கமான சிந்தனையே வெற்றி வாழ்க்கைக்கு ஏற்புடையது என்றுரைத்தார்.

பேராசிரியர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மகளிர் தினப் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் கல்லூரியின் பேராசிரியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.