கவிஞர் கவிதாசனின் “வெற்றி மொழிகள் 100” நூல் வெளியீட்டு விழா

சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றி மொழிகள் 100 (தன்னம்பிக்கை மின்னல்கள்) எனும் நூல் வெளியீட்டு விழா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்வில் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் காயத்ரி  வரவேற்புரை வழங்கினார்.

விஜயா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகம் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் பங்கேற்று “வெற்றி மொழிகள் 100” நூலினை வெளியிட கோவை புத்தகத் திருவிழா தலைவர் ரமேஷ் கிருஷ்ணன்  பெற்றுக் கொண்டார்.

இதில் விஜயா பதிப்பகம் நிறுவனர் வேலாயுதம், கோவை புத்தகத் திருவிழா தலைவர் ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ஏற்புரை மற்றும் நன்றியுரை வழங்கினார்.