கே.எம்.சி.ஹெச் சிட்டி சென்டர் சார்பில் கட்டுப்படாத வலிப்பு நோய்க்கான சிறப்பு  முகாம்

கோவை, ராம்நகர் கே.எம்.சி.ஹெச் சிட்டி சென்டர் மருத்துவமனை சார்பில் மருந்துகளால் கட்டுப்படாத வலிப்பு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தவுள்ளது.

மூளையில் ஏற்படும் ஒழுங்கற்ற அல்லது அசாதாரண மின்னதிர்வுகளால் வலிப்பு நோய் வருகிறது. பரம்பரையாக உள்ள குறையினாலோ அல்லது மூளையில் ஏற்படும் காயம் அல்லது பக்கவாதம் காரணமாக வலிப்பு நோய் வரலாம். வலிப்பு வரும்போது ஒருவரின் நடத்தை அசாதாரணமாக மாறிவிடும், நினைவிழப்பு ஏற்படும்.

ஆண்கள், பெண்கள், எந்த வயதினருக்கும், எந்த பிரிவினருக்கும் வலிப்பு நோய் வரக்கூடும். வலிப்பு நோய் என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வையும் வேலை அல்லது தொழில் வாழ்க்கையையும் பாதிக்கும் தீவிரமான ஒரு நரம்பியல் பிரச்சினை ஆகும். இதனை ஆரம்ப நாட்களிலேயே கண்டறிந்தால் வெற்றிகரமாக குணப்படுத்திவிடலாம். பெரும்பாலும் வலிப்பு நோயை மருந்துகளாலேயே குணப்படுத்திவிடமுடியும். சில வகையான வலிப்பு நோய்களுக்கு அறுவை சிகிச்சை, உணவுப் பழக்க மாறுதல் முதலான மாற்றுச் சிகிச்சை முறைகள் தேவைப்படும்.

70 சதவீத வலிப்பு நோய்கள் மருந்துகளாலேயே குணப்படுத்திவிடலாம். சில நோயாளிகளுக்கு வழக்கமான மருந்துகளால் அதனைக் கட்டுப்படுத்த இயலாது. அதுபோன்ற நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வாழ்வியல் மாற்றம், நரம்பு தூண்டுதல், அறுவை சிகிச்சை முதலான சிகிச்சை முறைகள் அளிக்கப்படும்.

வலிப்பு நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் முதலிய வசதிகள் தவிர கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோயாளிகளுக்காக EEG வீடியோ கருவி வசதியும் உள்ளது.

வலிப்பு நோயாளிகளுக்கான பிரத்யேக மருத்துவ முகாம் ஒன்றை கேஎம்சிஹெச் மருத்துவமனை இம்மாதம் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது. இது கோவை, ராம்நகர், விவேகானந்த சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் சிட்டி சென்டர் மருத்துவமனையில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோய் உள்ளவர்கள், வலிப்பு நோய் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் இம்முகாமில் பங்கேற்றுப் பலன் பெறலாம்.

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணர் டாக்டர் ராஜேஷ் சங்கர் ஐயர் மற்றும் அவரது குழுவினர் நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பொருத்தமான சிகிச்சை முறைகளைப் பரிந்துரைக்க உள்ளனர்.

இம்முகாமில் பங்கேற்க முன்பதிவு அவசியம். மேலும், தொடர்புக்கு 733 9333 485 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.