ரூட்ஸ் குரூப், சச்சிதானந்த ஜோதி நிகேதன் சார்பில் ரூ.5,41,305 கொடிநாள் நிதி

கோவை ரூட்ஸ் குரூப் நிறுவனப் பணியாளார்கள் மற்றும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமாரிடம் ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, வைஸ் சேர்மன் வருண் கார்த்திகேயன், மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தலைவர் டாக்டர்.கவிதாசன் ஆகியோர் கொடிநாள் நிதியாக ரூபாய். 5,41,305 வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், நிறுவனப் பணியாளர்கள் சார்பாக சரவணன், ஸ்ரீதர்ராவ், மணிகண்டன், மாரிமுத்து, சௌந்தர்ராஜன் மற்றும் ஆல்பர்ட் டேவின்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். நமது நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக நாட்டுப்பற்று மிக்க குடிமகனாக பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் அனைவரும் தங்கள் பங்களிப்பை அளிக்கும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டது.