இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

கோவையில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவையில் கடந்த ஒரு மாதமாக காலை நேரங்களில் குளிர் நிலவி வருகிறது. வெப்பம் அதிக அளவில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது வருகிறது.

இதனிடையே கோவையில் நாளை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 6,8,9 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யும் என்றும், ஜனவரி 7ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புக்கு ஏற்ப தங்களது பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.