வடக்கு மண்டல அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், மாநகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்படும் சாலைப்பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த ஆய்வுகளின்போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, மரியராஜ். கதிர்வேலுசாமி, கவிதா, ரங்கநாயகி, கண்ணகிஜோதிபாசு, மாநகரப் பொறியாளர் முருகேசன், மண்டல உதவி ஆணையர் ஸ்ரீதேவி, செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் திருமூர்த்தி. சக்திவேல், உத்தமன். இளங்கோவன், எல்.எஸ்.மகேஷ், சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், அரவிந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.