கோவை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்!

கோவை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ், அன்னூர் வட்டம், குன்னத்தூரன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும், அன்னூர் மற்றும் எல்லப்பாளையம் ஏரியில் ஒஎம்எஸ் கருவி அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் தலைமையில் செய்தியாளர் பயணம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இச்செய்தியாளர் பயணத்தின்போது நீர்வளத்துறை(அத்திக்கடவு அவிநாசி திட்டம்) வட்டாட்சியர் காந்திமதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் முத்துசாமி, இப்பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “அத்திக்கடவு அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மொத்த 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 நீர்வளத்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் (மொத்தம் 1045 எண்கள்) நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தற்போது 99% சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் ஆற்று நீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர்   முதலிய இடங்களில் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. எம்எஸ் குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கும் (மொத்த நீளம் 267.5 கி.மி) HDFE குழாய் பதிக்கும் பணிகள் 797.5 கி.மீ. நீளத்திற்கும் (மொத்த நீளம் 797.8 கி.மீ) முடிக்கப்பட்டுள்ளன.

மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பிரதான மின் இணைப்புகளுக்கான மின்சார தொடரமைப்புகள் அமைக்கும் பணி 100% முடிவுற்றுள்ளது (மொத்த நீளம் 63.15 கி.மீ). குளம் குட்டைகளில் Outlet Management System பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் 1044 எண்கள் பொருத்தப்பட்டுள்ளது (மொத்தம் – 10456T 600T856İT).

இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.1624.82 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20.02.2023 முதல் சோதனை ஒட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை ஆறு நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதானக் குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், நீரேற்று நிலையங்களின் இடையிலுள்ள கிளைக் குழாய்கள் மற்றும் 1045 குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள OMS கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது,இதுவரை 600 குளம் குட்டைகளில் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளது. கோவைக்கு  வரும் 258 குளங்களில் 122 குளங்களில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனை ஓட்டப்பணிகளும் முடிக்கப்பட்டு இத்திட்டமானது ஜுன் 2023 இறுதியில் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்அன்னூர்,OMS எல்லப்பாளையம் உள்ளிட்ட குளங்களில் கருவி பொருத்தப்பட்டுள்ள அமைப்புகளையும், குன்னத்தூரான்பாளையத்தில் நீரேற்று நிலையத்தில் தொட்டிகளுக்கு நீர் வெளியேற்றத்தை இயக்குவதற்கு தானியங்கி முறையில் மாஸ்டர் கண்ட்ரோல் சிஸ்டம் நிறுவப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது” என மாவட்ட ஆட்சியர்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.