கோவை-பெங்களுர் வந்தேபாரத் சோதனை ஓட்டம் தொடங்கியது

கோவையில் இருந்து பெங்களூருக்கு புதிய வந்தேபாரத் ரயில் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.

கோவையில் இருந்து பெங்களூர் வரை இடையே வரும் 30ம் தேதி முதல் புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று வந்தே பாரத் ரயில் கோவை மத்திய ரயில் நிலையம் வந்தடைந்தது.

இந்த புதிய வந்தே பாரத் காலை 6:10 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு சேலம், தர்மபுரி, ஓசூர் வழித்தடம் மூலமாக பெங்களூரை 5 மணி நேரம் 40 நிமிடங்களில் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோவை ஜங்க்சனில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் காலை 11.30க்கு பெங்களூர் சென்றடைகிறது. இந்த புதிய ரயிலால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.