மிக்ஜாம் புயல்: இந்துஸ்தான் கல்லூரி சார்பில் நிவாரண உதவி 

ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் உள்ள இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி சார்பில், சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் அலுவலகம் சாரா ஊழியர்கள் சார்பாக,  மிக்ஸாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான  அத்தியாவசியப் பொருட்களையும்,  சுமார் 2000 பேருக்கு தேவையான அனைத்து அடிப்படை பொருட்களையும் வழங்கினர்.
கடந்த 3 நாட்களாக பொருட்களை சேகரித்து, அதனை சென்னையில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக தனித்தனியாகப் பிரித்து, அப்பொருட்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் .ராமன், கல்லூரியின் செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா மற்றும் கல்லூரியின் அனைத்து ஊழியர்களும் பங்கேற்றனர்.