கே.வி கல்வி நிறுவனம் சார்பில் நிவாரண உதவிகள் 

கே.வி மேலாண்மை மற்றும் தகவல் ஆய்வு நிறுவனம் சார்பில்  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் பரவலான அழிவை ஏற்படுத்தி, குடும்பங்களை இடம்பெயர்ந்துள்ளது. மேலும், பலர் அத்தியாவசியத் தேவைகளின்றி தவித்து வருகின்றனர். இந்த மனிதாபிமான நெருக்கடிக்குப் பதிலளிக்கும்  வகையில்,  கே.வி மேலாண்மை மற்றும் தகவல் ஆய்வு நிறுவனம் சார்பில் , பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை நிறுவனத்தின் இயக்குநர்கள் ஷைனி மற்றும் ஐயப்பன் காவல்துறையினரிடம் வழங்கி ஆதரவளித்துள்ளனர்.