நடிகர் விஷாலுக்கு பதிலளித்த மேயர்..!

சென்னையில் நிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்து வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்துள்ளது. பல இடங்களில் 25 செமீ மேல் மழை பதிவாகியதால் சென்னை வெள்ளக்காடாக மாறியது.எங்கு பார்த்தாலும் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது.

பல இடங்களில் கரண்ட், தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் முடங்கிப்போயுள்ளது. மேலும் பலர் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பிரபல நடிகர் விஷால் ட்விட்டரில் தன் கருத்துக்களை கூறியுள்ளார்.
நான் தற்போது அண்ணா நகரில் தான் இருக்கின்றேன்.

என் வீட்டிற்குள் ஒரு அடிக்கு தண்ணீர் வந்துவிட்டது. அண்ணா நகரிலிலேயே இந்த நிலை என்றால் மற்ற இடங்களில் எப்படி இருக்கும். 2015 ஆம் ஆண்டு இருந்த அதே நிலை தான் தற்போதும் இருந்து வருகின்றது. இதனை பார்த்தல் கஷ்டமாகவும், கேவலமாகவும் இருக்கின்றது.

தயவுசெய்து அந்தந்த ஏரியாக்களில் எம்.எல்.ஏக்கள் கலத்திற்கு சென்று பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறினார் விஷால்.

இதைத்தொடர்ந்து மேயர் ப்ரியா விஷாலுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள் என்று பதிலளித்தார்.