தேசிய மாணவர் படை சார்பில் இரத்த தானம்

தேசிய மாணவர் படை தொடக்கத் தினத்தை முன்னிட்டு, கோவை தேசிய மாணவர் படை குழுவின் சார்பில் இரத்த தானம் செய்தனர்.

இதில் 5வது தமிழ்நாடு பெண்கள் பட்டாலியனின் முக்கிய அதிகாரி ஜோஷி, பெண்கள் பட்டாலியன் பிரிவில் 57 மாணவியர்களும், தேசிய மருத்துவ மாணவர் படையின் சார்பாக 70 மாணவர்களும் பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இரத்த தானம் செய்தனர்.