இந்தியாவின் முன்னணி நன்கொடையாளர் ஷிவ் நாடார்!

முன்னணி இந்திய நன்கொடையாளர் பட்டியலில் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

ஹுருன் இந்தியா அறிக்கையின் படி 2022-23 ஆம் நிதியாண்டில் ரூபாய் 2,042 கோடி நன்கொடைகள் வழங்கிய அவர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.  அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ. 5.6 கோடி வரை நன்கொடை அளித்துள்ளார். 2022ம் ஆண்டை ஒப்பிடும் போது  76 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இரண்டாவது இடத்தில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர். அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள்.