பண்டிகைகளை முன்னிட்டு கோவையிலிருந்து எந்த எந்த ஊருக்கு சிறப்பு பேருந்து ?

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை , சார்பில் கோவையிலிருந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்தான அறிக்கையில், வார இறுதி நாட்கள், ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி ஆகிய விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதால் அக்டோபர் 20 முதல் சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. கோவை காந்திபுரத்திலிருந்து சேலத்திற்கு 70 பேருந்துகள், உதகைக்கு 20 பேருந்துககளும் அதோடு, சிங்காநல்லூரிலிருந்து மதுரைக்கு 50 பேருந்துகள், திருச்சிக்கு 50 பேருந்துகள், தேனிக்கு 20 பேருந்துகள், திண்டுக்கல்லுக்கு 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் தேவைப்படும் போது கூடுதலாக பொது மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் விடுமுறை முடிந்த பிறகு பொதுமக்கள் மீண்டும் அவரவர் ஊர்களிலிருந்து கோவைக்கு திரும்பி வர ஏதுவான வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.