கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 10% கூடுதலாக வழங்க வேண்டும். இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை பணியாளர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி 50 ஆயிரத்திலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். டிசம்பர் 17ஆம் தேதி ஓய்வூதிய தினமாக அரசு அறிவித்து அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.