கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் விமானப்படை தின விழா!

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 91ஆம் ஆண்டு விமானப்படை தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற  இவ்விழாவில், கல்லூரி முதல்வர் ராமசாமி  தலைமை வகித்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய விமானப்படை குரூப் கேப்டன் செந்தில் குமார் கலந்துகொண்டு,தேசிய மாணவர் படை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், விமானப்படையில் உள்ள பல்வேறு பணி நிலைகள்,  இத்துறைகளில் மாணவர்கள் சேர்வதற்கான தகுதிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், அகில இந்திய வாயு சைனிக் முகாமில் ( ALL INDIA VAYU SAINIK CAMP) வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நிகழ்ச்சியின் இறுதியில் பாராட்டு விழா நடந்தது.

இதில், விமானப்படை பிரிவு, பெண்கள் படைப்பிரிவு, மருத்தவ படை பிரிவு உள்ளிட்ட  தேசிய மாணவர் படை  பிரிவுகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் விமான படைப்பிரிவின் ANO சூரிய உமாதேவி இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செய்தார்.