உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை: ஜெகன்மோகன் ரெட்டி இன்று திறப்பு 

ஆந்திரா மாநிலம் விஜயவாடா நகரில்  உலகின் மிக பெரிய அம்பேத்கர் சிலை இன்று திறக்கப்படுகிறது.

சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு ஸ்மிருதி வானம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இதனை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார்.

125 அடி உயரத்தில், 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைந்திருப்பதால் இதன் மொத்த உயரம் 206 அடியாக அமைந்துள்ளது.

மேலும், சிலை அமைந்துள்ள பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அனுபவ மையத்தில் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை காட்சிகள் எல்.ஈ.டி திரைகளில் காட்சிப்படுத்தப்படும். 2000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 8000 சதுர அடியில் உணவு அரங்கம், குழந்தைகள் விளையாடும் இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை அடங்கும்.