கோவையில் தொண்டர்கள் படைசூழ அண்ணாமலையின் உற்சாக நடைபயணம்!

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ‘என் மண் என் மக்கள்’ எனும் நடைபயணத்தை தொடங்கியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது  கோவையில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

 

அதன் ஒருபகுதியாக, திங்கள்கிழமை கணபதி பகுதியை வந்தடைந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கட்சி தொண்டர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக, பொள்ளாச்சி, வால்பாறை, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்கள் படைசூழ நடைபயணம் மேற்கொண்டார்.

 

கடந்த ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் தற்போது கோவையை வந்தடைந்தது.

இந்த நடைபயணத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத், கோவை மாவட்ட பாஜக செயலாளர் பாலாஜி உத்தம ராமசாமி, மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.