பிஎஸ்ஜி மருத்துவமனையில் “தோஹார்ட்” கருத்தரங்கம்

பிஎஸ்ஜி மருத்துவமனையில் “தோஹார்ட் 2023” எனும் தலைப்பில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தியாவில் இருதய மாற்று அறுவை சிகிச்சையின் தற்போதைய நவீன நுட்பமான வசதிகள், விளைவுகளை பாதிக்கும் காரணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு கண்காணிப்பு போன்றவை பற்றி இக்கருத்தரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் இந்தியாவிலுள்ள இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு இருதய, நுரையீரல் சார்ந்த நெஞ்சக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றியும் சிகிச்சைக்கான நவீன முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் மருத்துவத்தில் வளர்ந்து வரும் தற்போதைய இருதய அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு, அனுபவம் வாய்ந்த மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு விலங்குகளின் இருதயம் மூலம் நேரடி பயிற்சிகள் கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை இருதய மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேரலையில் காண்பித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் பிஎஸ்ஜி மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் மருத்துவருமான புவனேஸ்வரன், மருத்துவர்கள் சுப்பா ராவ், பாலகிருஷ்ணன், புவனேஸ்வரன், மனோஜ் துரைராஜ், முருகேசன், முருகன், மருத்பிரதீப், ஆனந்தநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.