கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்

கோவை , பொள்ளாச்சி, உடுமலை சாலையில் உள்ள டாக்டர் மாகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சியை சேர்ந்த ஹரிபிரசாத்திற்கு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பயில கனரா வங்கி மூலம் வழங்கப்படும் கல்விக் கடன் ஒப்புதல் ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், புதுக்கோட்டை மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் வழங்கினார்கள்.

இம்முகாமில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், என்.ஜி.எம் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன், எஸ்.கே.பி கல்வி நிறுவனங்கள் தலைவர் கருணாநிதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் ராஜ்குமார், வணங்காமுடி மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.